- KKCFA
- Tamil
academics
Tamil
Vision
- உலகில் உள்ள 6 செவ்வியல் மொழிகளில் உயிர்ப்புடன் வாழும் மொழியான தமிழ் மொழியின் இலக்கிய வளங்களைக் கொண்டு தமிழரின் கலை பண்பாட்டு மரபை வளரும் தலைமுறையிடம் விதைத்து செவ்வியல் கலை மரபை வளர்த்தெடுத்தல்.
- தனிமனித மாண்பு, சமூக மாண்பு , தமிழர் அறவியல் மற்றும் அறிவியல் மனப்பான்யை வளர்த்தல் ,காத்தல், மேம்படுத்துதல் .
- கலைக் கோட்பாடுகள், பண்பாட்டு நெறிகள்,
- தனிமனித ஒழுக்கம்.
- பண்பாடு சார்ந்த செல் திசைகள்.
- நன்னெறிகள் மிக்க வாழ்வியல் கல்வியைக் கற்றல்.
Mission
- தமிழ் இலக்கியம் கற்றல் வாசித்தல் பிழையின்றி எழுதுதல்
- இயல் இசை நாடகம் எழுதும் திறன் வளர்த்தல்
- சமூகச் சிந்தனை மிக்க மாணவச் சமுதாயத்தை உருவாக்கல் .
- திறன் சார் கல்வி மற்றும் மதிப்பீட்டுக் கல்வி, பாலினச் சமத்துவ சிந்தனை, மனித உரிமை சார் சிந்தனைகள், சூழலியல் விழிப்புணர்வு, சிந்தனை, சூழலியற் பாதுகாப்பு சார்ந்தக் கல்வியை மாணவரிடத்தில் வளர்த்தெடுத்தல்.
- மென்திறன்களான பேச்சுப் பயிற்சி,
- எழுதும் பயிற்சி, பிழையின்றி வாசித்தல் மற்றும் கட்டுரை எழுதும் பயிற்சி மற்றும் தொகுப்புரை வானொலி அறிவிப்பாளர்,
- TV VJ & FM RJ பயிற்சி உள்ளிட்ட திறன்களை வளர்த்தெடுத்தல்.
- தமிழ் இலக்கியத்தில் கலை, இலக்கிய நடனம் சார்ந்த ஆய்வுகளை மாணவர்கள் மேற்கொள்ள துணை புரிதல்
Code of Ethics (தமிழ் வகுப்பிற்கான நெறிமுறைகள)
- தமிழ் வகுப்பிற்கான மணி அடித்தவுடன் 5 அல்லது 10 நிமிடத்திற்குள் மாணவர்கள் வகுப்பறைக்கு வருதல் வேண்டும்.
- வகுப்பறையை சுகாதாரமாக அமைதியாக தனி மனித சுகாதாத்துடன் பேணுதல் மாணவர்களின் அடிப்படைப் பொறுப்பாகும்.
- கல்லூரி வகுத்தளித்துள்ள மாணவர்களுக்கான சீருடை அடையாள அட்டையுடன் மாணவர்கள். வகுப்புக்கு வருதல் வேண்டும்.
- மாணவர்கள் வகுப்பறைக்குள் புத்தகம் மற்றும் குறிப்பேடுகள் எடுத்து வருதல் வேண்டும்.
- ஆசிரியர் பாடம் நடத்தும் வேளை மாணவர்கள் குறிப்பெடுத்தல் வேண்டும். ஆசிரியர் குறிப்பிடும் வரிகளை அடிக்கோடிட்டு தேர்வுக்கு பயன்படும் வகையில் குறித்தல் வேண்டும்.
- வகுப்பறையில் மாணவர்கள் அனைவரும் கேள்வி கேட்க வேண்டும்.
- மாணவர்களின் சொற்திறன், சிந்தனைத் திறன் மொழித்திறன் மேம்படும் வகையில் வாசிப்புப் பயிற்சி எழுத்து சொல் விளையாட்டு வழங்கப்படும்.
- வகுப்பறையில் பாடம் சார்ந்து இலக்கிய சமுதாய கண்ணோட்டத்துடன் விவாதங்கள் கருத்துகள் மாணவரிடத்தில் நற்சிந்தனையை உருவாக்கும் விதத்தில் நடத்தப்படும்.
- பருவந்தோறும் முதல் மூன்று நிலைகளில் பல்கலைக்கழக தேர்வில் மதிப்பெண் எடுத்தவர்களுக்கு பரிசாக நூல்கள் வழங்கப்படுகிறது.
- வகுப்பறைகளில் நடத்தப்படும் தேர்வுகள் மற்றும் வழங்கப்படும் திட்டக் கட்டுரைகளை மாணவர்கள் தவறாமல் பங்கேற்று எழுதுதல் வேண்டும்.
- பிறந்த நாள் கொண்டாடும் மாணவர்கள் யாவர்க்கும் பரிசாக வாசிப்பு பழக்கத்தை வளர்த்தெடுக்கும் நோக்கில் நூல்கள் பரிசாக வழங்கப்படும்.
- மாணவர்களிடை பாலின பேதமின்றி சமத்துவத்தை கற்பித்து பெண்கள் மீதான மதிப்பீடுகளை வளர்த்தும் வகுப்பறையில் வளாகத்தில் சகோதரத்துவ சமத்துவ தோழமையுணர்வை மேம்படுத்தும் விதமாக தமிழ் பாடவேளைகள் அமையும்.